தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிகள் 2025. தமிழகத்தில் 38 மாவட்ட வாரியாக கிராம உதவியாளர் பணியிடங்கள்: தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு மற்றும் மதிப்பெண்கள் வழங்கும் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் செய்து, புதிய வழிகாட்டுதல்களை தமிழக வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது. அதனை இந்த பதிவில் காணலாம்.

புதிய விதிமுறைகளின் படி நிபந்தனைகள்:
கல்வித்தகுதி:
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் SSLC தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்கவேண்டும். கட்டாயமாக மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இரு சக்கர வாகன உரிமம்:
ஓட்டுநர் உரிமம் இருந்தால் தேர்வு தேவையில்லை. மிதிவண்டி / வாகனம் ஓட்டும் திறன் இருந்தால், தேர்வு நடத்தப்பட்டு அதற்கும் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தமிழ் மொழி திறன்:
தமிழில் வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகிய திறன்களுக்கு ஏற்ப, நேரில் பரிசோதித்து 30 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.
வசிப்பிடம்:
விண்ணப்பதார்களில் அதே கிராமத்தில் இருப்பவர்களுக்கு 35 மதிப்பெண்களும், தாலுகா எல்லைக்குள் இருப்பவருக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படலாம்.
நேர்காணல்:
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணலில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாச்சியர், மற்றும் பிற அலுவலர்கள் அடங்கிய குழுவினரால் நடத்தப்படும் நேர்காணலுக்காக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
ஒட்டுமொத்த செயல்திறன் :
விண்ணப்பதாரரின் தனிப்பட்ட திறன்களை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 6 முதல் அதிகபட்சம் 12 மதிப்பெண்கள் வழங்கப்படலாம். 6 – ஐ விட குறைவாகவோ, 12 – ஐ விட அதிகமாகவோ மதிப்பெண்கள் வழங்கக்கூடாது.
மேலும், நியமன உரிய விதிகளில்படி வெளியிடுவதை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். தேர்வு முறைகள் முறையாக மேற்கொள்ளபட்டதா என அவர்கள் உறுதி செய்த பின்பே முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
TN VILLAGE ASSISTANT G.O PDF LINK – CLICK HERE
